மார்கழியின் குளிருக்கேற்ற முரட்டு வெயில்
தார்ச்சாலையில் வெளுத்து வாங்கியது.
சாலையில் வெவ்வேறு இரைச்சல்களுடன்
அத்தனை வாகனங்கள் அவ்வளவு வேகத்தில்.
நான் இருந்த வாகனமும் அப்படியே!!
ஒரு நேரத்தில் அனைத்து வாகனங்களும்
ஒரு இடத்தில் ஒதுங்கி, ஒதுங்கி சென்றன.
நான் நினைத்தது வாகனசக்தி தான் காரணம் என்று.
ஆனால், .,.,.!!!
அழகான குரங்கொன்று சாலையில்,
ஒழுகி படர்ந்த ரத்தத்தில் இறந்து கிடந்தது
வேடிக்கை பார்ப்பவர்களின் மத்தியில்...!!
இதற்கும் வாகனசக்தி ஒன்றுதான் காரணம்.
வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன்
என்பது கூடுதல் தகவல்....!!!
No comments:
Post a Comment