21 January 2015

திருநாள்!!

நாட்டின் முன்னேற்றத்தை
நடைமுறைப்ப‌டுத்த எழுதிய
தீர்மான‌த்தின் அடையாளம்.

விடுதலை வாங்கிய இந்தியாவை
விழிவைக்க விதைத்த‌ விதையின் ஆரம்பம்.

சேறாக இருந்த நாட்டை வைத்து
மாமா நேரு, சிலையமைக்கக் கொடுத்த‌ வாய்ப்பு.

முற்றுகைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து
முறையாக நாட்டை வழிந‌டத்த நினைவுகூறும் நாள்!

மன்னர்களிடம் இருந்த நாட்டை
மக்களிடம் தந்த நாள்!
மக்களிடம் ஆட்சி வந்த நாள்!!

குடியரசுத் திருநாள்!
குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment