21 January 2015

திருநாள்!!

நாட்டின் முன்னேற்றத்தை
நடைமுறைப்ப‌டுத்த எழுதிய
தீர்மான‌த்தின் அடையாளம்.

விடுதலை வாங்கிய இந்தியாவை
விழிவைக்க விதைத்த‌ விதையின் ஆரம்பம்.

சேறாக இருந்த நாட்டை வைத்து
மாமா நேரு, சிலையமைக்கக் கொடுத்த‌ வாய்ப்பு.

முற்றுகைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து
முறையாக நாட்டை வழிந‌டத்த நினைவுகூறும் நாள்!

மன்னர்களிடம் இருந்த நாட்டை
மக்களிடம் தந்த நாள்!
மக்களிடம் ஆட்சி வந்த நாள்!!

குடியரசுத் திருநாள்!
குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்..

19 January 2015

உயிரும் வாகனமும்


மார்கழியின் குளிருக்கேற்ற முரட்டு வெயில்
தார்ச்சாலையில் வெளுத்து வாங்கியது.
சாலையில் வெவ்வேறு இரைச்சல்களுடன்
அத்தனை வாகனங்கள் அவ்வளவு வேகத்தில்.
நான் இருந்த வாகன‌மும் அப்படியே!!
ஒரு நேரத்தில் அனைத்து வாகனங்களும்
ஒரு இடத்தில் ஒதுங்கி, ஒதுங்கி சென்றன‌.
நான் நினைத்தது வாகனசக்தி தான் காரணம் என்று.

ஆனால், .,.,.!!!
அழகான குரங்கொன்று சாலையில்,
ஒழுகி படர்ந்த‌ ரத்தத்தில் இறந்து கிடந்தது
வேடிக்கை பார்ப்பவர்களின் மத்தியில்...!!
இதற்கும் வாகனசக்தி ஒன்றுதான் காரணம்.
வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன்
என்பது கூடுதல் தகவ‌ல்....!!!