29 November 2014

பெண்ணின் தினம்!

அந்த‌ தருணம் வந்தது‍‍..
என் பெற்றோர் எனக்குத் தந்தது.
அந்த தருணம் எந்த‌ தருணம்?
இந்த தருணம்.
என்னைப் பெற்றவளுக்கு வலி கொடுத்த தினம்.
அந்த வலியை நான் சுமக்கவும்,
என்னை எப்படி வளர்த்தனரோ
என் மக்களை அப்படி வளர்க்கவும்
நினைவு படுத்தும் தினம்.
குடும்பத்தை சுமக்க என் தந்தை
சொல்லாமல் சொன்ன தினம்..
அடடா! என்ன தினம். என்னே தினம்.. என் தனம்.
நான் பிறந்த தினம். 

-பெற்றோருக்காகப் பெண்.

4 November 2014

மரங்கள் சொல்லுகின்றன‌

மனிதன் மரங்களை
வெட்டுகிறான்.
அதனால்,
அழுதுகொண்டே
மரங்கள் சொல்கின்றன,
"எங்கள் இனத்தை அழிக்கிறாய், 

அதன்மூலம் உங்கள் இனம் அழிய வழிவகுக்கிறாய்.
காற்றை வரத் தடுக்கிறாய்.
கள்வா! உனக்கே நீ அழிவைத் தொடுக்கிறாய்!
எங்களை வளர்த்தால்
நீஙகள் வாழலாம்! இல்லையேல், 

சீக்கிரத்தில் அடியோடு வீழலாம்! "

                       
            -சு.க.மணிவேல்.