18 October 2015

குழப்பம்

நான் ஒரு மனநிலையில்
தொடங்கினேன் இந்த நாளை.
எதிர்பார்ப்பு மிகுந்த எனது காரியங்களில்
இன்னும் நாட்டம் வரவில்லை.
நாட்டம் தர நானும் எதையும் தரவில்லை.
காரியங்களின் முடிவுகள் வந்து
செல்கின்றன அச்சங்களாக
புதிய பயங்கள் வருகின்றன மிச்சங்களாக
"பன்றிக்கும் பன்னீருக்கும்" தொடர்பில்லாதது
போல உள்ளன என் செயல்கள்
தூங்குகின்றன ஓடவேண்டிய செயல்முயல்கள்
குழப்பமெல்லாம் முடிவிற்காக
கூடிவரும் விடிவிற்காக