14 February 2015

காதலர் தினம்

இது காதலைப் பற்றிய கவிதை.
காதலைப் பற்றியதால் எழுதியதன்று.
காதல் இதயத்தில் பிறந்து,
அறிவில் சிறந்து, உயிரில் வளர்ந்து,
உணர்வில் மிதக்கிறது;
அது உண்மையை மட்டுமே மதிக்கிறது.
அன்னையிடம் தொடங்கி அனைவரித்தும் படர்கிறது.
அது நெடும்பெரும் புதினமாய்த் தொடர்கிறது.
காதலே வாழ்க்கை இல்லை.
இருந்தும் பலருக்குக் காதலின்றி வாழ்க்கையே இல்லை.
வாழ்க்கைக்குக் காதல் சாபம் இல்லை.
வாழ்ந்துகாட்டினால் காதலுக்குப் பாவம் இல்லை.
பெருங்காதலுக்கு,
நறுங்காதலுக்கு, அன்பாலே வளரும் காதலுக்கு,
பிப்ரவரி 14 மட்டுமன்று.
அனுதினம் காதல்தினம் காதலர் தினம்.