4 December 2014

கவிதையும் வாய்ப்பும்

"வாய்ப்புகள் தேடி வராது. நாம தான்
தேடிப் போகணும்" சற்று எளிதாகப் பலர்
உரைக்கும் வரிகள். மன்னிக்கவும்.
'பெரியாள்' சொன்னால் அது வசனம்.
"சார் நா கவிதை எழுதுவன் சார்"
அடிக்கடி நிராகரிக்கப்பட்ட என் வசனம்.
நான் இன்னும் வளராத கவிஞன்.
ஆதலால், நான் சொல்வது வரிகள்.
"அவரப் பாத்தா ச்சான்ஸ் கெடச்சிடும்" என
ஒருவரைப் பார்க்கச்சென்றால் நாமும் நிராகரிக்கபட்ட
கவிதையாவது எளிமினேஷன் சுற்று.
குவாளிபிகேஷன் சுற்றுக்கு என்ன தகுதி வேண்டும்?
பணம், பதவி, பெரும்புகழ் இதில் ஒன்றைப் பெற்றவரின் பல‌ம்.
அதற்கு எதற்கு திறமை? எல்லாம் வெறுமை.
வீட்டில் வைத்து நாம் ம‌ட்டும் அழகு பார்க்கலாம்.
வெளியில் கொண்டு சென்றால், "இதுல என்ன இருக்கு?"
உலகம் ஏளனக் கவிதை பாடும்.
அதோடு நிறுத்திவிடத்தோன்றும் வாய்ப்பு
கேட்பதையும் கவிதை எழுதுவதையும்.

No comments:

Post a Comment