11 April 2015

ஒரு அற்புதம்! ஒரு அதிர்ச்சி!!

ஒரு கவிதையை எழுத யோசித்தேன்.
என் எண்ண அலைகளை வாசித்தேன்.
எப்படி கவிதை வருமென மறுபடி யோசித்தேன்.
கடவுள் மனக் கதவை த‌ட்டுவாரோ இல்லை
கனவில் வந்து கொட்டுவாரோ என்று புரியவில்லை.
இல்லை பொருளை ஊடுருவி, உள்வாங்கி மனத்தின்
வசனங்களை பதிவு செய்வது கவிதை ஆகிறதோ?
ஒன்றும் செய்யாமல் எப்படி ஒன்றி வருகிறது கவிதை.
ஒன்றும் தராமல் எப்படி ஓடி வருகிறது கவிதை.
ஒரு அற்புதம். ஒரு அதிர்ச்சி. முடிவில் ஒரு கவிதை.


No comments:

Post a Comment