6 December 2015

முன்வருவோமா??


வேகமாய்க் கொட்டு கொட்டியது மழை
வலியில் சிக்கிக்கிடக்கிறது தமிழகத்தின் தலை
தலைநகரம் தண்ணீரில் மிதக்கும் தனி நரகம்.
சென்னை.. இப்போது தண்ணீரில் மூழ்கிய திண்ணை.

கடலூர் மாவட்டத்திலும் வெள்ளம் ‍-அதைக்
கண்டுகொள்ளவில்லை நிறைய உள்ளம்.
கடலூர் தமிழத்தில் இல்லையா? சென்னை
மட்டுந்தான் தமிழகத்தின் பிள்ளையா?

ஏரியில் வீடுகட்டியதால் பாதி சென்னை
சின்னா பின்னம் ஆனது - ஐயகோ
எப்போதும்போல் கடலூர் மாவட்ட‌
வயலுக்குள் மழைத்தண்ணீர் போனது.

சேர்த்துவைத்த செல்வமெல்லாம் தண்ணீரில் விட்ட‌
சோகத்தில் சென்னை மக்கள்!
செல்வத்தோடு விளைந்த பயிரை இழந்த‌
சோகத்தில் கடலூர் மக்கள்!!

மக்கள் நிறையபேர் பொருட்க‌ளை மட்டும்
தொலைக்கவில்லை.. வாழ்வையும் சேர்த்துதான்..
ஓடி உதவுவோம் உடல் வேர்த்துதான்! கைகோர்த்துதான்!!

விமர்சனம், குற்றச்சாட்டு, உரையாடல் என‌
எல்லாவற்றையும் விட எல்லார்க்கும் உடனடித்தேவை
உணவு உடை தஞ்சம் - எல்லாரும்
உதவ‌ முன்வருவோமா கொஞ்சம்??